ஊர்ப்புதிர் - 77 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 77 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. அவளிவநல்லூர்
2. சிங்கல்படி
3. திருச்செங்கோடு
4. தெள்ளானந்தல்
5. நெல்லூர்பேட்டை
6. பனமடங்கி
7. கமலப்புத்தூர்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக இருந்தது (இப்போது இல்லை).
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்