ஊர்ப்புதிர் - 39 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 39 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. உத்தரம்பாக்கம்
2. ஓட்டப்பிடாரம்
3. அறந்தாங்கி
4. சென்றாயன்பாலயம்
5. சேடப்பட்டி
6. மதுராந்தகம்
7. சின்னமனூர்
8. அந்தியூர்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
குறிப்பு: விடை: ஒரு சட்ட மன்ற தொகுதி.
ராமராவ்